கண்டி மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உடன்
அமுலாகும் வகையில் தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் இந்த
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்
குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரும் வரையில் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக்
கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர்.
அதன்போது,
தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின்
ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம்
ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து
அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக
நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய
பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும்
நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக
மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம்
அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments