சவுதியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் உபயோகிப்பவர்களால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன, அதேபோல் சீட் பெல்ட் அணிவதன் மூலம் வாகன விபத்துக்களின் போது ஏற்படும் உயிர் மற்றும் உடற்சேதங்கள் குறைந்து காணப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் உபயோகப்படுத்தினலோ அல்லது சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று வெளியான செய்தியை சவுதி போக்குவரத்துத் துறை மறுத்துள்ளதுடன் சுமார் 150 ரியால் முதல் 300 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் கூடுதலாக 11 வகையான மாற்று தண்டனைகளை விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அபராதத்துடன் கூடிய கூடுதல் மாற்று தண்டனையாக மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை 'வாகன விபத்தின் மூலம் பெரும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனை வார்டுகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள்' என்ற வித்தியாசமான தண்டனை திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
http://saudigazette.com.sa/article/530002/SAUDI-ARABIA/No-jail-for-using-mobile-phones-not-wearing-seatbelts-while-driving-Official
http://saudigazette.com.sa/article/530002/SAUDI-ARABIA/No-jail-for-using-mobile-phones-not-wearing-seatbelts-while-driving-Official
0 Comments