கண்டி கலவரம்சம்பிக்க, ரணில் உருவாக்கியதல்ல. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நல்லாட்சி ஏதோ ஒருவகையில் ஆட்டம் காணும் என்று மஹிந்த அணி நம்பியது.
ஆனால் இவர்கள் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.
இந்த கண்டி கலவரத்தில் முஸ்லிம்கள் இவ்வளவு இழந்த பின்னரும் கூட, இந்த சிங்கள சமூகம் இரண்டு சிங்களவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், பன்சலைகள் தாக்கப்பட்டுள்ளன இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது.
ஆதாவது இந்த கண்டி கலவரத்தில் முஸ்லிம்கள்தான் சிங்களவரை தாக்கிவிட்டார்கள். என்ற ஒரு மனப்பதிவை பெரும்பாலான சிங்கள மக்களின் மனதில் பதியவைத்துவிட்டார்கள்.
இதை சாதகமாகப் பயன்படுத்தி மைத்ரி, ரணில் இருவரும் முதுகெலும்பற்ற கோழைகள் என்ற கருத்தை சிங்கள சமூகத்தில் மக்கள் மயப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த மனநிலையில் இருக்கும் சிங்கள சமூகத்திடம்....
ஒரு தைரியமான சிங்களத் தலைவனின் வெற்றிடம் குறித்தி பேசுகிறார்கள்.
அந்த வெற்றிடத்தை மஹிந்த அல்லது கோட்டாவால்தான் நிறப்ப முடியும் என்ற மனப்பதிவை ஆழமாக மக்கள் மனங்களில் விதைக்கிறார்கள்.
இந்த மனநிலையோடு சிங்கள மக்கள் இருந்தால் மட்டுமே அடுத்துவரும் மாகாண சபைத்தேரதலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி தாமரை மொட்டுக்கு தலை தூக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
-Safwan Basheer-
0 Comments