Subscribe Us

header ads

பேஷ் கவர் அணிந்து வாக்களிக்க செல்லும் பெண்களுக்கான தேர்தல் முஸ்லிம் பொறுப்பதிகாரியின் வேண்டுகோள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018



நம்நாட்டு தேர்தல்கள் சட்டத்திற்கு ஏற்ப வாக்களிப்பதற்கு வருகின்ற ஒவ்வொருவரும் தனது தேசிய அடையாள அட்டையை சமர்பிப்பது கட்டாயமான ஒரு விடயமாகும்.



இந்தச் சட்டத்திலிருந்து நாட்டின் ஜனாதிபதிக்கு விதிவிலக்களிக்கப்படவில்லை.

எனவே அவ்வாறு அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு, வாகனம் செலுத்தும் அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை போன்றவை இல்லாமல் வருகின்ற நபர் யாராக இருந்தாலும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்பது சகலரும் அறிந்திருக்கக் கூடிய விடயமாகும்.

எனவே அவ்வாறு அடையாளத்தை நிரூபிக்கின்ற ஆவணத்தை எடுத்து வருபவர்கள் அந்த அடையாள அட்டைக்கு உரியவரா என்பதை உறுதி செய்த பின்னரே வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

முகத்திரை அணிந்து வருபவர்களுக்கும் இந்த சட்டம் ஏற்புடையதாகும். எனவே முஸ்லிம் பெண்மணிகள் முகத்திரை அணிந்து வந்தாலும் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே முகத்திரை அணிந்து வாக்களிக்க வருகின்ற பெண்களின் முகத்தைப் பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வாக்களிக்க வருகின்ற பெண்கள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறு நான் தனிப்பட்ட முறையில் வேண்டிக் கொள்கின்றேன்.

அங்கு முஸ்லிம் அதிகாரிகள் இருந்தும் எங்களை சோதனைக்கு உட்படுத்துகின்றனர் என்று பின்னர் எங்களைக் குறை சொல்ல வேண்டாம்.

தேர்தலில் கடமை புரியும் வாக்குநிலையப் பொறுப்பதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஜே.ஏ.மனாப்
மொழி பெயர்ப்பாளர்
உயர் நீதிமன்றம்   

Post a Comment

0 Comments