Subscribe Us

header ads

உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு


தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட வருட ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகையை மெக்சிகோவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த பகுதியில் மாயன்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சிதிலமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு மாயன்கள் வாழ்ந்த இடம், சடங்குகள், குடியேற்றங்கள் பற்றி தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதவுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டா கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments