கல்பிட்டி பகுதியில் மீண்டும் வேகமாக பரவி வரும் டெங்கு இரத்தப் போக்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் 09-01-2018 செவ்வாய்க்கிழமை பொது மக்களின் உதவியுடன் அனைத்து பள்ளி நிர்வாகம்,வைத்திய அதிகாரி காரியாலயம்,பிரதேச சபை,பிரதேச செயலகம்,ஆகியோரின் பங்களிப்புடன் டெங்கு வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.
எனவே தங்கள் வீடுகள்,வேலைத்தளங்கள்,வியாபாரஸ்தாபனங்கள்,வெற்றுக்காணிகள்,ஏனைய நிலையங்களில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நீர்த்தேங்கி நிற்கும் அனைத்து பொருட்களையும் சேகரித்து,எரித்து விடுங்கள்,அல்லது புதைத்து விடுங்கள் அல்லது பேக்குகளில் கட்டி வைத்து பிரதேச சபை டெக்டருக்கு கொடுங்கள்.
குழாய் கிணறுகளை மூடி வையுங்கள் நீர் தேக்கி வைக்கும் சிமெந்தி தாங்கிகளை சுத்தம் செய்து விடுங்கள்,குளிர்சாதனப்பெட்டியில் நீரை அகற்றிவிடுங்கள்.
அனைவரும் பூரண பங்களிப்பும்,ஒத்துழைப்புப்பும் வழங்குமாறு கேட்டுக்கொள்வதோடு இதன் பின் நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படள்ளது.
-Rizvi Hussain-
0 Comments