Subscribe Us

header ads

போயா தினத்தில் சாராயம் விற்றதாக ஒருவர் கைது (Photos)

பாறுக் ஷிஹான்


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போயா தினமான நேற்று(3) சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 போத்தல்கள் மதுபானம் மற்றும் 43 பியர் ரின்கள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் மேலும் கூறினர்.

குற்றப் புலனாய்வு பிரிவின் யாழ்.பிராந்தியத்தின் பொறுப்பதிகாரி ஜனாத்தன், உப பொலிஸ் பரிசோதகர் லக்மல் கே எம்பலாயகம ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினராலே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments