Subscribe Us

header ads

Facebook hacking செய்வது எவ்வாறு? அதிலிருந்து எம் Facebook கணக்குகளைப் பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? அறிந்து கொள்ள...


அனேகமானோரை சிறுநேரத்திற்குள் அதிக மன உளைச்சளுக்கு ஆளாக்கும் விடயம் இது!

Facebook server க்குள் புகுந்து தாம் நினைத்தோரின் பாஸ்வேர்ட்டை அள்ளிக்கொண்டு வருபவர்கள் யாரும் இங்கு இல்லை!


“ஒருத்தன ஏமாத்தனும்மா, அவன் ஆசைய தூண்டனும்” என்பது போல ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தமது இரகசியங்களை இழப்பவர்களே அதிகம். இந்த முறையை பயன்படுத்தியே அனேகமானோரின் பாஸ்வேர்ட்டை பெற்றுக்கொள்கின்றனர் பெரும்பாலான Hackers!

இந்த முறையை “Phishing Method” என்று அழைப்பதுன்டு!

அதாவது, சமூக வலைத்தளங்களின் Login Page ஐ போலவே, போலி Login page களை உருவாக்கி, அந்த போலி பக்கத்தில், குறிப்பிட்ட நபரை Login செய்ய வைப்பதாகும்.

Login செய்த அடுத்த கனமே, குறிப்பிட்ட நபரின் Username, password, ip address, மற்றும் பயன்படுத்திய Browser என்பன Hacker இன் E-mail ற்கு சென்றுவிடும்.

(இதற்கு ஏற்றது போல் Coading கொடுத்துவைக்கப்பட்டிருக்கும்)

அனேகமானோர், இவ்வாறு போலி பக்கங்களை உருவாக்கிக்கொள்வது Wapka க்கு சொந்தமான Domain இல் தான்.

போலி பக்கங்களை உருவாக்கிவிட்டு, அதன் URL ஐ சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவர், உதாரணமாக, Whatsapp இல் “அதிக Facebook likes வேண்டுமா? இந்த Link ற்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள்” 

என்று சுவாரஷ்யமான மெசேஜ் உடன் ஒரு லிங் உம் பரப்பிவைக்கப்படும்!

அதை நம்பி, அந்த link இல் உள்நுழையும்போது, உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கும் அந்த Fake facebook login page.

பெரும்பாலும் Original login page போலவே காணப்படும். ஓரிரண்டு வித்தியாசங்கள் மாத்திரம் காணப்படும்,

1. Url வித்தியாசமானதாக இருக்கும்

2 குறிப்பிட்ட போலி பக்கத்தில் Advertisement காணப்படலாம்.

இதை கவனிக்காமல் நாம் நமது Password ஐ கொடுத்து Login செய்த அடுத்த கனமே, நமது Facebook Account அடுத்தவரின் வசம்.

உடனே உங்களது Facebook Account இல் உள்நுழைந்து உங்கள் தகவல்கள் அனைத்தும் ஆராயப்படும், பின் அவர்கள் நினைத்தது போல நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும்!

இப்படியாக சதிவலையில் சிக்காமல் அவதானமாக இருந்துகொள்ளுங்கள், நீங்கள் சிக்காமல் இருந்தாலும், Whatsapp இல் வரும் போலி செய்திகள் மற்றும் link களை கேனைத்தனமாக நம்பி, அதை Share செய்து அடுத்தவனை படுகுழியில் தள்ளாமல் இருந்தால் போதும்!!!.

MBM.Asarudeen

Post a Comment

0 Comments