கடந்த 10 வருடத்தில் சிங்கள மற்றும் தமிழ் பெண்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை சாட்சியுடன் நிரூபிக்க முடியும் எனவும் அவர் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவா் மேலும் தெரிவிக்கையில்
75 சதவீதமான சிங்களப் பெண்கள் கருத்தடை செய்து கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் பெண்களில் ஒரு சதவீதமேனும் இந்தக் கருத்தடை செய்யாதவர்களாக உள்ளனர்.
இலங்கையில் சிங்கள பெண்கள் மாத்திரமின்றி சிங்கள ஆண்கள் கூட ஆண்மை இழக்கும் நிலைக்கு மாற்றப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையை அரச சார்பற்ற நிறுவனங்கள் சில மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலரின் அங்கீகாரமும் கிடைப்பதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இந்த நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சுமார் 900 மில்லியன்ரூ பாவுக்கு அதிகமான நிதியை செலவிட்டுள்ளது.
இவ்வாறு எல்.ஆர்.டி. செய்து கொள்ளும் ஒரு சிங்கள பெண்ணுக்கு 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதாகவும் அவா் மேலும் தெரிவித்தாா்.
0 Comments