நாட்டில் பல இடங்களில் பொற்றோல் தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் கல்பிட்டியிலுள்ள இரண்டு பெற்றோல் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் வழமை போன்று வழங்கப்பட்ட வந்த போதிலும் நேற்று(06/11/2017) இரவு 9.00 மணியளவில் பிரதான வீதியில் காணப்படும் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் முடிவடைந்து உள்ளது.ஆனால் சின்னக்குடியிருப்பில் காணப்படும் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வழமை போல் பெற்றோல் விநியோகிக்கப்படுவதை அவதானிக்க முடிந்தது.
சின்னக்குடியிருப்பு பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர் "வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றோல் வழங்கப்படும் கேன்களுக்கு எந்த காரணங்கொண்டும் பெற்றோல் வழங்கப்படமாட்டாது" என்று வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு நாட்களில் பெற்றோல் பிரச்சினை நாட்டில் சீரமைக்கப்படுமாக இருந்தால் கல்பிட்டியில் பெற்றோலால் பிரச்சினைகள் ஏற்படாது...
0 Comments