துபையில் போக்குவரத்து அபராதங்களை 50% தள்ளுபடியில் டிசம்பர் இறுதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டோர் அந்த நிலுவைகளை 50 சதவிகிதத் தள்ளுபடியுடன் எதிர்வரும் 2017 டிசம்பர் மாத இறுதி வரை கட்டலாம் என கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் சிறப்புச்சலுகை வழங்கப்பட்டதை மீண்டும் நினைவூட்டியுள்ளனர் துபை போலீஸார்.
இந்த சிறப்புச் சலுகை 2017 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கு பொருந்தாது எனவும் அறிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments