கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 43 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்கள் சிலாபம், புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் , 43 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
0 Comments