ஊடகப்பிரிவு
இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300 மில்லியன்
ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச்செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு
அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்று
வரை
(05.11.2017) 20 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும்
அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டரிசியானது கிலோ கிராம் 74 ரூபாவுக்கு
விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் 25 கிலோவிற்கு மேற்பட்ட அரிசியை
கொள்வனவு செய்பவருக்கு கிலோகிராம் 73 ரூபாவிற்கு விற்பனை செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ள 30 ஆயிரம் மெற்றிக் தொன் சம்பா அரிசியில் 15 ஆயிரம்
மெற்றிக் தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும்
குறித்த தொகையான அரிசியானது இந்த மாத நடுப்பகுதியில் வந்து சேரு மென எதிர்பார்க்கப்படுவதாகவும்
அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 926 மில்லியன்
ரூபாவை செலவிடுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
0 Comments