மஹிந்த நாமம் கசப்பது முஸ்லிம்களுக்கே ஆபத்தானது என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ்நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறு பிள்ளைகளை கட்டுப்படுத்த பேய் வருகின்றது என ஏமாற்றுவதை போன்று தான் இன்றைய ஆட்சியாளர்கள்முஸ்லிம்களை அடக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நாமத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பல ஆதாரங்கள் இருந்தாலும் அண்மையில் இவ்வரசு கொண்டுவந்த மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தின்போதான ஒரு விடயம் முஸ்லிம்களை எந்தளவு பாதித்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்பதற்காகவே இந்த திருத்தத்தை கொண்டுவந்தாதக அரச தரப்புதகவல்கள் கசிந்துள்ளன.
இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்நிலையில் இதனை எதிர்க்க அமைச்சர் றிஷாத் உறுதியாக இருந்துள்ளார். இதன் போது அமைச்சர் றிஷாத் முன்னாள்ஜனாதிபதி ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவே இயங்குகிறார் என்ற பேச்சை எழுப்பி அமைச்சர் றிஷாதைஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர்.
இதன் மூலம் அமைச்சர் றிஷாத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பாரிய துரோகத்தில் பங்குகொண்டுள்ளார். இதற்குபயன்பட்ட ஆயுதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நாமம். இன்று மஹிந்த நாமத்தை கூறினால் முஸ்லிம்களிடம்குறித்த அரசியல் வாதிகளை பூச்சியமாக்கி விடலாம்.
முஸ்லிம்களுக்கு ஆபத்தான ஒரு விடயத்தை செய்துகொள்ள முஸ்லிம்களின் மஹிந்த மீதான வெறுப்பு கொள்கையேபயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் முன்னாள் ஜனாதிபதி மீது முஸ்லிம்கள் வெறுப்பை கொண்டிருந்தால் அதனை சாதகமாக வைத்தேஇவ்வாட்சியாளர்கள் இது போன்ற பல விடயங்களை சாதித்து கொள்வார்கள் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து செயற்படவேண்டும் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments