Subscribe Us

header ads

அகதிகளுக்கு அடைக்களம் கொடுக்க முடியாமல் எம்மை நோக்கி விரல் நீட்டுவது அவர்களின் இயலாமையை காட்டுகிறது..


அமைச்சர் ராஜித சேனாரத்ன ரோகிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்வதாகநினைத்து புகழ்ந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ..

மியன்மார் அகதிகள் இலங்கையில் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகவுள்ளதுஇது தொடர்பில் கருத்துதெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்னமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இலங்கைக்கு அதிகள் வந்தபோதுஇன்று தாக்க வரும் பிக்குகள் அன்று எங்கிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனூடாக இவர்இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளார் எனும் விடயத்தை கூற வருகிறார்நாம்இனவாதிகள் என்றால்ஏன் நாம் அன்று மியன்மார் அகதிகளை சிறு துரும்பும் அணுகாத வகையில் பாதுகாக்கவேண்டும்.நாம் மியன்மார் அகதிகள் பாதுகாத்தது கூட தவறானதுஇவ்வாட்சியின் நடைபெற்றதை போன்று அவர்களைதாக்கி இருக்க வேண்டுமென கூற வருகிறார்களாபல விடயங்களில் சர்வதேசங்களை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்தஎங்களுக்கு இவர்களை எதிர்க்க முடிவு செய்திருந்தால்அது ஒரு பெரிய விடயமுமல்ல. 

இவ்வாட்சியில் மியன்மார் அகதிகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அது அவர்களது ஆட்சியின் குறைபாடுஅதற்குஎம்மை கூறி தப்பிக்க வர வேண்டாம்அன்று நாம் பாதுகாத்த ஒன்றுக்கு இன்று இவ்வரசுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல்திணறுவதானது இவ்வாட்சியில் இனவாதத்தின் வேரூண்றகை எந்தளது ஆழமானது என்பதை அறிந்துகொள்ளலாம்அவர்கள் இந்த நாட்டில் பல வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற செய்தி கூட பலருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தனகூறியே தெரிந்திருக்கும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல முன்னாள் ஜனாதிபதியின் அருமையை இப்போது தான் மக்கள்உணர்வார்கள்அமைச்சர் ராஜித போன்றார்கள் முன்னாள் ஜனாதிபதியை இகழ்வதாக நினைத்து அவரது வாயாலேயேஅவரது பெருமைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்உண்மை ஒரு போது அழிந்துவிடாதுமுதலில் இப்படி தன்னைஅறியாமல் முன்னாள் ஜனாதிபதியை புகழும் அமைச்சர் ராஜிதவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனகுறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments