அண்மைய நாட்களாக கல்பிட்டியில் நீண்ட காலமாக வாராந்த சந்தை நடாத்தப்பட்டு வந்தது தற்போது புதிய பஸ் நிலையம் காணப்படும் பகுதி சுற்றுலா விடுதி உரிமையாளர் ஒருவரால் அத்துமீறி அடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அந்த பகுதியை எச்சரிக்கை செய்தும் கேட்காதன் காரணமாக அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியை அகற்றி இப்பகுதி மக்களுக்கு சொந்தமான பகுதி என்பதை தைரியாக சுற்றி காட்டிய கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களுக்கு கல்பிட்டி நலன் விரும்பிகள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்..
இதை கல்பிட்டி அரசியல்வாதிகள் கூட கண்டும் காணாது போல் இருந்தும், அவர் தைரியமாக இப்பகுதியில் காணபட்ட வேலிப்பகுதியை பிரதேச சபை ஊழியர்களை கொண்டு அகற்றியது மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தினை தற்போது ஒரு படி உயர்த்தியுள்ளது.
இவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை தவிர்ப்பதற்கு அவர் மேலும் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-Rizvi Hussain-
0 Comments