கல்பிட்டி Smarshers விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்திய மென்பந்து கிரிக்கெட்டு சுற்று போட்டியில் புத்தளம் தில்லையடி காசிம் சிட்டி பகுதியில் வளந்து வரும் அணியான City winners வெற்றிவாகை சூடியது..
அணிக்கு பதினொறு பேர் கொண்ட 21 கீழ் பட்ட புத்தளம் மாவட்ட அணிகளுக்காக இரண்டு நாட்களாக கல்பிட்டி Smarshers விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 16 கழகங்கள் பங்குபற்றியது. இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி World Lions அணியினரும் காசிம் சிட்டி City winners அணியினரும் தகுதிப்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய World lions அணியினர் 6 ஓவர்கள் நிரைவில் 36 ஓட்டங்களை பெற்றன. 37 எனும் வெற்றியிலக்கை நோக்கிய துடுப்பெடுத்தாடிய City winners அணியினர் மிகவும் நிதானமான முறையில் வெற்றி இழக்கை எட்டினர். இப்போட்டியில் man of the match City winners அணியின் சுஜாத் தெறிவுசெய்யப்பட்டார்.
-Irfan Rizwan-
0 Comments