Subscribe Us

header ads

இவ்வாறு ஏதாவது கோளாறுகள் இருந்தால் ஷைத்தான் நமது உள்ளங்களில் ஆன்மாக்களில் செளகரியமாக ஆட்சி நடாத்துகிறான்! அவைகள் எவை?


அவசர அவசரமாக கடமைக்காக தொழுது முடிக்க வேணும் என்று நினைக்கின்றோமா ?

குரானை ஓதுவதில் சோம்பலாக இருக்கிறதா ?

ஒரு சில நாளாவது தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என தோன்ற வில்லையா?

சுபஹுக்கு விடிவதற்கு சற்று முன்னர் எழும்பி தொழுது விட்டால் போதும் என நினைக்கின்றோமா?

கையில் போதுமான அளவு இருந்தும் தேவை உடையவருக்கு கொடுக்க மனம் மறுக்கிறதா ?

சிறிய சிறிய உதவி ஒத்தாசைகள் உதவி உபகாரங்கள் செய்ய மனம் இடம் தருவதில்லையா?

கோபம், பெருமை, பொறாமை, பேராசை, வைராக்கியம் என சில உணர்வுகள் பிய்த்துக் கொண்டு வருகிறதா ?

தாய் தந்தையர், அவர்ககளது உறவுகள், பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் மனசு வரவில்லையா?

அரச அலுவலகங்களில் வேலை செய்யும் போது ஒவ்வொரு சதமும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்தே ஊதியமாக வருகிறது என்ற நினைவு வர வில்லையா?

சமூக விவகாரங்கள் என்று வந்தால், நாம் நாட்டுக்கு ஊருக்கு வெளியே தானே இருக்கிறோம், அடுத்தவர் பார்துக் கொள்ளட்டும் என மனம் சொல்கிறதா?

தொழில் செய்யும் இடங்களில் கரிசனை இன்றி கடமையாற்றுகிறோமா ?

பொது வேலைகள், சேவைகள் என அழைக்கப்பட்டால் நழுவவல் மனநிலை இருக்கிறதா?

தகுதியானவர் இருக்க தான் முண்டியடிக்க வேண்டும் என தோன்றுகிறதா?

உற்றார் பெற்றார் உறவினரை அனுசரித்து வாழ நேரம் போதாதா ?

நண்பர்களுடன் மணிக்கணக்கில் அரட்டையடிக்க (Chat) நேரம் இருந்தும் உம்மா வாப்பா உடன் பிறப்புகள் உறவினருடன் கதைக்க காசும் நேரமும் இல்லையா?

வீட்டில் சீரிப் பாய்வதும் ரோட்டில் சிரித்து மகிழ்வதுமாக பொழுது போகிறதா..?

குரான் ஹதீஸை நல்ல நூல்களை படிக்கும் பொழுது புதிய புதிய பொயின்ட்ஸ் எடுத்து பிரபல்யம் தேட வேணும் என மனசு சொல்கிறதா?

அல்லது அவற்றை வைத்து அடுத்தவரில் குறை காணுவதும் , ஆக்ரோஷமாக விமர்சிப்பதும் நோக்கமாக இருக்கிறதா...?

அடுத்தவர் மனதை புண்படுத்துவது கொடிய பாவம் என உணர முடியாதுள்ளதா ?

அடுத்தவரை கேளி செய்வதில் ஆத்ம திருப்தி ஏற்படுகிறதா?

தனிமையில் இறையச்சம் குறைவதாக தெரிகிறதா?

கல்யாணம் விஷேடம் விழாக்கள் என்று வந்தால் நேரத்துக்கு தொழ முடியாமல் போகிறதா?

காரியாலயங்களில் தொழ கூச்சமாக இருக்கிறதா?

இவ்வாறு ஏதாவது கோளாறுகள் இருந்தால் ஷைத்தான் நமது உள்ளங்களில் ஆன்மாக்களில் செளகரியமாக ஆட்சி நடாத்துகிறான் என்றே அர்த்தம்..

நமக்கு ஆன்மீக பண்பாட்டு பக்குவம் அறவே இல்லை என்பதற்கான அளவு கோள்களே அவைகள் ..!

எங்களை நாங்களே ஒவ்வொரு நாளும் "முஹாஸபா" பரீட்சித்து பார்த்துக் கொள்ள வேண்டும்..!!

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments