Subscribe Us

header ads

ஜனாதிபதிக்கு தற்போது 25 கோடி பந்தா கார் தேவைப்படுகிறது.

 
பத்து ரூபாய் பேனையில் கையொப்பமிட்டவர் 25 கோடி ரூபாய் பந்தா காரில் சுற்றுவதை அவதானிக்கின்ற போது ஜனாதிபதி பதவியின் சுகபோக வாழ்வில் ஜனாதிபதி மைத்திரி வீழ்ந்துவிட்டதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்...


ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலப்பகுதியில் பத்து ரூபாய் பேனாவை பயன்படுத்தியே கையொப்பங்களை இட்டார். இது போன்ற பல மிக எளிமையான செயற்பாடுகளை அந் நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா கைக்கொண்டத்துடன் அதனை விளம்பரப்படுத்தியும் வந்தார்.


அண்மையில் V2025 நிகழ்வுக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உலகில் விலையுயர்ந்த பென்ஸ் கார் என அறியப்படும் BENS S600 MAYBACH 25 கோடி ரூபாய் பெறுமதியான பந்தா காரில் சென்றுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலப்பகுதியில் காட்டிய எளிமை எவ்வாறு மிகவும் அடிமட்ட எளிமையாக இருந்ததோ அதே போன்று தற்போது அவரின் செயற்பாடுகள் அதி உயர்ந்த ஆடம்பரமாகவுள்ளது.வாழைஇலை சேறு வீட்டு சாப்பாடு என எளிமை பந்தா காட்டி வந்த ஜனாதிபதி தற்போது ஆடம்பர பந்தாவுடன் வலம்வருகிறார்.


ஒருவர் ஒரு பதவியை எடுக்கின்ற போது அதனை மிகத் தூய்மையாக செய்ய வேண்டுமென விரும்புவார்கள். இருந்தாலும் கண் முன் இருக்கின்ற ஆடம்பரங்களை பார்க்கின்ற போது அவற்றை சிறிது சிறிதாக செய்து ஆடம்பரத்தில் முற்றாக மூழ்கி விடுவார்கள். இது போன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா, ஜனாதிபதிப் பதவியின் சுக போகங்களில் மூழ்கிவிட்டார் என்ற அச்சம் எழுகிறது,


அல்லாது போனால் தனது பதவிக் காலத்தை மிகச் சிறப்பான வரலாறாக பதிவாக்க வேண்டுமென கருதிய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவினால்,அதற்கு முடியாது என்ற நிலை எழுந்தவுடன்,வரலாறை விடுத்து ஜனாபதிபதியை பதவியை அனுபவித்துவிட்டாவது செல்வோமா என மன நிலைக்கு கூட தள்ளப்பட்டிருக்கலாம்.


அப்படித் தான் இவ் ஆட்சி மீதான விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதியின் இச் செயற்பாடானது தனது ஆரம்ப நிலைப்பாட்டுக்கு தலைகீழாக உள்ளது போன்றே அவரது ஆட்சியும் மக்கள் நலனுக்கு முற்று முழுதாக எதிரானதாகவுள்ளது என்பதை இலங்கை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments