Subscribe Us

header ads

மேற்குலகம் எப்போதும் முஸ்லிம்களையே பகடைக்காய்களாக பயன்படுத்துவார்கள்..


மேற்குலக சக்திகளே தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மியன்மாரில் ரோஹிங்கயர்களுக்கு எதிரானசெயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்தார்.

அவரது ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ..

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி இலங்கையில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றங்களின் பின்னணியில்அமேரிக்கா பங்காற்றியது என ஆட்சி மாற்றத்தை அடிப்படையாக கொண்டு கூறியிருந்தார்இவர்களுக்கு இலங்கையின்விடயங்களில் தலையிட வேண்டிய என்ன தேவை உள்ளதுஅமெரிக்காவானது ஒரு விடயத்தை சாதிக்கநினைத்துவிட்டால் அதற்கு எத்தனை பலிகளை கொடுக்கவும் தயங்காது.அந்த வகையில் தான் இலங்கையில் அனைத்தும்நடந்தேறியிருந்தன.

தற்போது மியன்மார் நாட்டில் அனைவரும் கண்டிக்கத் தக்க வகையிலான முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்புசம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.ராக்கைன் மாநிலமானது கடல் பிரதேசத்தை அண்டிய ஒரு பகுதியாகும்இப்பகுதியில் அமேரிக்கா போன்ற நாடுகள் எண்ணை சுரங்க பாதை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வாதாக அறியமுடிகிறது.அதற்கு இப் பகுதிகளில் மக்கள் வாழ்வது தடையாகவுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் தைரியம் அவ்வளவு இலகுவில் யாருக்கும் வந்துவிடாதுஇதன்பின்னால் மிகப் பெரும் சக்திகளின் ஆதரவுகள் இருக்க வேண்டும்மியன்மாரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இஸ்ரேலின்ஆயுதங்கள் என இஸ்ரேலின் முன்னாள் பொலிஸ் ஆணையாளர் ஒருவர் கூறியிருந்தார்.இது தெளிவானஇராஜதந்திரமானது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துள்ளார்.இந்த விடயங்களே இதன் பின்னால் உள்ளசர்வதேச சதிகளை இணங்காட்ட போதுமானதாகும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்ற போது முஸ்லிம்கள் எம்மை இயன்றளவுதூற்றினார்கள்.இதனை தான் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களும்  எதிர்பார்த்தனர்.எனவேமுஸ்லிம்கள் தங்களுக்கு நடக்கின்ற அநியாயங்களின் உண்மை சூத்திரதாரிகளை இணங்கண்டுஅதனை எவ்வாறுஎதிர்கொள்வது என்ற வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது என அவரதுஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments