இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்போது முழுமையான வசதிகளை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் வரையில், கூடுதல் வருவாயை வசதியாக கையாளக்கூடிய வகையில் மாற்றுத் திட்டம் தேவை.
இரத்மலானை விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை எளிதில் தரையிறக்க முடியும், இதற்காக இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
அருகிலுள்ள நாடுகளில் இருந்து வரும் சுமார் 100 பயணிகள் விமானங்கள், இரத்மலானையில் விமான நிலையத்தில் தரையிறக்கலாம்
தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிகளவான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரத்மலானையில் சில விமானங்களை தரையிறக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments