வரிய குடும்பங்கள் வசிக்கும் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தில்லையடி ,தேத்தா வாடி ,வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில், சிறார்கள் அதிக மாதாந்த கட்டணம் செலுத்த முடியாமை ,அதிக தொலைவில் பாலர் பாடசாலை அமைந்திருந்தல் ,போன்ற பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பாலர் பாடசாலைக்கு செல்லாமையை அவதானித்த முன்னால் பிரதேச சபை உறுப்பினர் A.J.M. தாரிக் அவர்கள் .
2008ம் ஆண்டு அப்போதைய பெரியப்பள்ளி தலைவராக இருந்த மர்ஹூம் நெய்னா மரைக்கார் ஆசிரியரிடம் தான் இப்பகுதி முன் பள்ளி சிறார்களுக்காக பாலர் பாடசாலையை ஒன்றை பிரதேச சபை ஊடாக அமைக்க முயற்சிகள் எடுக்கவுள்ளதாகவும் இதற்கு பொருத்தமான இடம் பெரிய பள்ளிக்கு சொந்தமான புதுக்குடியிருப்பில் அமைத்திருக்கும் காணி என்று கூறியதற்கு அமைய மர்ஹூம் நெய்னா மரைக்கார் ஆசிரியர் அவர்கள் பாலகர்களின் கல்வி வளர்ச்சிக்காக நிர்வாகத்தினரிடம் பேசி 10 பேச்சர்ஸ் காணியை பெற்றுக்கொடுத்தார்கள்.அன்னாரின் கல்விக்கான இந்த முயற்சியை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவருடைய மறுமை வாழ்வில் பிரகாசத்தை ஏற்படுத்துவானாக ஆமீன்.
அதன் பின்னர் பல சிரமங்கள் முயற்சிகளுக்கு மத்தியில் A.J.M. தாரிக் அவர்கள் 07/09/2010 அன்று இப்பாலர் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார் .அதன் பின்னர் அன்று தொடக்கம் இன்று வரை தனது முயற்சியால் அரசியல் வாதிகளின் உதவிகளினாலும் தனது சொந்தப்பணத்தாலும் பல அபிவிருத்திகளை இப்பாலன் பாடசாலைக்கு அவர் செய்து வருகிறார்.
அதே போல் இம்முன் பள்ளியில் இணைந்து கொள்ளும் சிறார்கள் அனைவருக்கும் சீருடை ,கொப்பிகள்,புத்தகப்பை,காலணி,போன்ற அனைத்து பொருட்களையும் மாணவர்களுக்கு தனது சொந்தப்பணத்தில் இலவசமாக வழங்கி வருகிரார்.அதே போல் கல்பிட்டி பிரதேசத்தில் ஆகக்குறைந்த கட்டணம் அறவிடும் பாலர் பாடசாலை என்றால் அது அல் நுஹ்மா பாலர் பாடசாலையாகத்தான் இருக்க முடியும்.
மேலும் இன்ஷா அல்லாஹ் இப்பாடசாலையை முன்னிலை பாலர் பாடசாலையாக மாற்றுவதற்கு மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ,இதற்காக இப்பகுதியில் வசிக்கும் பெற்றோர் உதவி செய்ய வேண்டும் என்று தங்கள் சிறார்களை இப்பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
தற்போது 20 சிறார்கள் வரை கல்வி கற்பதோடு இரண்டு ஆசிரியர்களும் கல்வி கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் அன்று தொடக்கம் இன்று வரை பயிற்றப்பட்ட ஆசிரியரான M.B.F.மும்தாஜ் பேகம் அவர்கள் செயல்பட்டுவருதும் பாராட்டத்தக்கது.
-RIZVI HUSSAIN- (KV REPOTER)
0 Comments