Subscribe Us

header ads

இலங்கையில் 36 ரோஹிங்யாக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் (படங்கள் வீடியோ இணைப்பு)


சில மாதங்களுக்கு முன் படகு மூலம் யாழ்பாணத்தில் படகுமூலம் கரையோதுங்கிய (31) மியன்மார் - ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அனைவரும் அறிவர். அதற்கு முன்னரும், நான்கு பேர் மன்னாருக்கு படகு மூலமும், ஒருவர் பங்களாதேஷ் கடவுச் சீட்டை பயன் படுத்தி விமானம் மூலமும் இலங்கை வந்து UNHR அமைப்பில் பதிவு செய்யப்பட்டு இன்று கொழும்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், முஸ்லிம் வொய்ஸ் நடத்திய நேர்காணலில் இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை திரட்டி. பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளுக்கு நேரடியாக அங்கு சென்று உதவிகளை செய்ய எதிர்பார்த்துள்ளோம். மனிதநேயம் படைத்தவர்களும், விரும்பியவர்களும் உங்கள் உதவிகளை  அந்நாட்டில் அகதிகளாக இருப்பவர்களுக்கு செய்யலாம். 







தாருல் ரஹ்மா நலன்புரி சங்கம் மற்றும் முஸ்லிம் வொய்ஸ் இணையத்தளம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கான உதவிகளை செய்யும் பணியில் விரும்பும் தனி நபர்களும், அமைப்புக்களும், நிறுவனங்களும் எங்களுடன் இணைந்துக் கொள்ளலாம். உங்கள் உதவி ஒத்தாசைகள் மற்றும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். 

Post a Comment

0 Comments