சந்திரகிரகணம் இலங்கையின் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதியில் அவதானிக்கப்பட்டது.
சந்திர கிரகணம் நேற்று திங்கட்கிழமை இரவு 10.52 இற்குத் துவங்கி நள்ளிரவு 12.48 இற்கு நிறைவடைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதற்கமைய இலங்கையின் மட்டக்களப்பு காத்தான்குடி ஆகிய பிரதேசங்களிலும் சந்திர கிரகணம் அவதானிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் திங்கட்கிழமை மாலையிலிருந்து மழை மேக மூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்த போதிலும் பின்னர் மேக மூட்டங்களின் விலகலுக்கிடையே சந்திர கிரகணத்தை அவதானிக்க முடிந்ததாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் அதிதொழினுட்ப கமெராவின் மூலம் இரவு 11.20 மற்றும் 11.22 இற்கு அவதானிக்கப்பட்டது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் தருணத்தில் நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments