Subscribe Us

header ads

யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் நிலவிய நூலக தேவை JO 74 அமைப்பினரால் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)

 பாறுக் ஷிஹான்-


யாழ்ப்பாணம் சோனகத்தெருவில்  நீண்ட காலம்  நிலவிய நூலக தேவை நேற்று(6)   JO 74  அமைப்பினரால்  திறந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 

யாழ் சோனக  மக்கள் அதிகளவானோர்  கலந்து கொண்ட நிலையில்  காலை 10  மணியளவில் 136 கலீபா அப்துல் காதர் வீதியில் உத்தியோக பூர்வமாக இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் JO74_நண்பர்கள்   மஸ்ஜித் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.சி  முபீன்   எழுத்தாளர் இக்பால்  மூத்த ஊடகவியலாளர்   கலாபூஷணம் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்று வெளியேறிய நண்பர்கள் இணைந்து JO74 அமைப்பினை உருவாக்கி இப்பகுதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

























Post a Comment

0 Comments