கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று (02) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சைகளை முன்னிட்டே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் முறையிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 784 208 என்ற தொலை பேசி இலக்கத்திற்கோ முறையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments