2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். தற்போது கடன் செலுத்தி வருகின்றோம். அடுத்த தலைமுறையினரை கடனாளியாக மாற்ற என்னால் இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் புத்தக படிப்பிற்கு அப்பால் நவீன தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் பொருளாதாரத்தை உருவாக்கவுள்ளோம். இதன்படி உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணினி வழங் கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொரட்டுவை வேல்ஸ் குமர கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு நாம் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றோம். இதன்படி கல்வியினால் மாத்திரம் நாட்டின் முன்னேற்றப் பாதையை நிர்ணயிக்க முடியும். இதன்பிரகாரம் 13 வகுப்பு வரை கல்வியை கட்டாயமாக்கவுள்ளோம். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே ஆர்வம் கொள்வர். எனவே, எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம்.
இதன்படி எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையில்லாத நாட்டை ஒப்படை க்க வேண்டும். தற்போது நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த கடன் எவர் எடுத்திருந்தாலும் அதனால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்புகள் ஏற்படாமல் குறித்த கடனை அடைக்க வேண்டியது எமது பொறுப்பாகும். நாம் இனிமேல் கடனாளியாக இருக்க முடியாது. முதலில் கடனை அடைக்க வேண்டும். இதற்கான பணிகளை தற்போது நாம் ஆரம்பித்துள் ளோம்.
பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை கடனாளிகளாக வைக்க விரும்பமாட் டோம். அதுபோன்று 2020 ஆம் ஆண்டு வரையில் கடன் செலுத்தி முடிக்க முடி யும். 2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றி அமைப்போம். அத்துடன் அம்பாந்தோட் டையில் 10 ஆயிரம் ஏக்கர் மற்றும் ஹொரணை உள்ளிட்ட பல ஏக்கர் காணிகளில் நாம் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
அத்துடன் உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணினிகளை வழங்கவுள் ளோம். இதனை இரு வருடத்திற்கு ஒத் திகை மாதிரி செய்து அதன் பின்னர் பாடத் திட்டத்தை போதிக்க கூடிய நிலைமையை உருவாக்குவோம் என்றார்.
0 Comments