Subscribe Us

header ads

இலங்கை பொலிஸ் சேவை­யில் அதி­க­ள­வான வேலை வாய்ப்­புக்கள்


வடக்கில் பொலிஸ் சேவை­யில்தான் அதி­க­ள­வான வேலை வாய்ப்­புக்கள் உள்­ளன என்­ப­தனால்   பொலிஸ் சேவையில் இணைய முன்­வர வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் செஞ்­சோலை சிறு­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

செஞ்­சோலை சிறுவர் இல்ல சிறு­மிகள் நேற்று மாகா­ண­சபை அமர்­வினை நேரில் பார்க்க வந்­தி­ருந்­தனர். அதன்­போது சபை தேநீர் இடை­வே­ளைக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட போது முத­ல­மைச்சர் சிறு­மி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.
அதன் போது சிறு­மிகள் தங்­க­ளுக்கு இல்­லத்தில் கல்வி கற்க மண்­டப வசதி செய்து தரவும், நுளம்பு வலை தந்து உத­வு­மாறும் , கல்வி கற்று முடிந்த பின்னர் வேலை வாய்­புக்­களை ஏற்­ப­டுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­தனர்.
அதற்கு பதி­ல­ளிக்கும் போது இல்­லத்­திற்கு தேவைப்­படும் வச­தி­களை எழுத்து மூலம் தந்தால் அதற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தெரி­வித்த அவர், வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை பொலிஸ் ­சே­வையில் அதி­க­ள­வான வேலை வாய்ப்புகள்  உண்டு  எனவும் அதற்கு இணைய முன் வாருங்கள் எனவும் தெரி­வித்தார். மேலும்  எமது பகு­தியில் சட்ட ஒழுங்­கு­களை நிலை­நாட்ட பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments