Subscribe Us

header ads

பாடசாலை அதிபரின் கண்டிப்பான உத்தரவினால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை - காரணம் இதுவா?


பாடசாலை அதிபரின் கண்டிப்பான உத்தரவினால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது கையடக்க தொலைபேசி பாடசாலை அதிபரிடம் சிக்கியமை காரணமாக, இந்த விபரீத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் வர வேண்டும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் பாடசாலைக்கு வருவது கட்டாயம் என அவரின் வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டமையினால் மனவிரக்தியடைந்த மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி திப்பட்டுவாவ பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று முன் தினம் மாலை அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்ற போது மாணவியின் பாடசாலை பை பாலத்தில் மிதந்துள்ளது.
அந்த பையில் இருந்த தேசிய அடையாள அட்டைக்கமைய ஜே.கே.தருஷி சந்தருவனி என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவி ஆகும். அக்குரஸ்ஸ பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து சடலத்தை கண்டுபிடிப்பதற்கு முயற்சித்துள்ள நிலையில் நேற்று மாலை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments