Subscribe Us

header ads

சீனப் பெண்ணொருவரின் மனிதாபிமான செயல் - நுவரெலியாவில் சம்பவம் (படங்கள் இணைப்பு)


நுவரெலியாவில் அநாதரவாக திரியும் நாய்களுக்காக சீனப் பெண்ணொருவர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நுவரெலியா நகரத்தில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்கியதோடு, அவை பாதுகாப்பாக உறங்கும் வகையில் சாக்குகளையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.
குறித்த வெளிநாட்டு பெண்ணினால் பல்வேறு வகையான உணவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த நகரில் சுற்றித் திரியும் நாய்களை ஒரு இடத்திற்கு அழைத்து வந்து அவற்றினை மிகவும் அன்போடு வழங்கியுள்ளார்.
நாய்களின் மூக்கு பகுதியில் உணவினை வைக்கும், அவர் நாய்கள் விரும்புவதனை மாத்திரம் தெரிவு செய்து அதனை வழங்கியுள்ளார். இதன்போது நாயின் தலையினை அன்பாக தடவிக் கொடுத்து உணவு வழங்குகிறார்.


தனது பெயர் மற்றும் ஊர் போன்றவை அவசியமற்ற விடயங்கள் எனவும், சுற்றி திரியும் நாய்களையும் செல்ல பிராணிகளை போன்று பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களுக்கு போன்று அவற்றிற்கும் அன்பு காட்ட வேண்டும் என குறித்த சீனப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சீனப் பெண்ணின் மனிதாபிமான செயற்பாடு, இலங்கையர்களுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments