இளைஞர், யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் உட்பட போதைப்பொருள் விற்பனை செய்யும் குழுவொன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் ஏற்பாடு செய்யப்படும் விருந்து நிகழ்வின் போது, இளைஞர், யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் உட்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
போதைப்பொருள் விநியோகம் செய்யும் குழுவினர் ஜீப் வண்டியில் பயணிக்கும் போது கல்கிசை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல அமைச்சர் ஒருவரின் சாரதியினால் குறித்த ஜீப் வண்டி செலுத்தப்பட்டுள்ளது. ஜீப் வண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது கடற்கரை விருந்துகளுக்காக பொதுவாக பயன்படுத்தப்படும், 12 போதை மாத்திரைகள் (ஒரு மாத்திரை 7500ரூபாய்), குஷ் எனப்படும் போதைப்பொருள் 10 கிராம் மற்றும் 3 கிராம் கொக்கெய்னும் மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான 9 புகையிலை பக்கட்டுகளும் அங்கிருந்து பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதி அண்மையில் பதவி மாற்றம் செய்யப்பட்ட பிரபல அமைச்சரின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments