பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே, பிரதமர் ரணிலை, ரவி கருணாநாயக்க இரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சந்தித்து பேசவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments