கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 58.4 பில்லியன் ரியால்களாக இருந்தது தற்போது (இரண்டாவது காலாண்டில்) 46.5 பில்லியன் ரியால்களாக குறைந்துள்ளது. எனினும் முதல் காலாண்டில் (இவ்வருடம்) 26.2 பில்லியன் ரியால்களாக இருந்தது.
கடந்த மூன்றாண்டுகளாக எண்ணெய் விலை சரிந்து வந்ததை அடுத்து பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து வந்தது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பற்றாக்குறையை சமாளிக்கத் துவங்கியது. ” இன்றைய நிலை 2020 ஆம் ஆண்டில் நிதிநிலையை சரிப்படுத்திக்கொள்வதை நோக்கி முன்னேறுவதற்கு சாட்சியமாக இருக்கிறது” என்றார் நிதியமைச்சர் முகம்மது அல் ஜாடான்.
இவ்வாண்டு மொத்தப்பற்றாக்குறை 198 பில்லியன் ரியால்களாக இருக்கும் என்றும் இது நாட்டு வருமானத்தில் 8 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் இப்பற்றாக்குறை 297 பில்லியன் ரியால்களாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய் வருமானம் தவிர இதர வருவாய் வகையினங்களில் அதிக முன்னேற்றம் இருந்ததும் பற்றாக்குறை குறைய ஓர் காரணம் எனக் கூறப்படுகிறது. எண்ணெய் விலை முன்பை விட உயர்ந்துள்ளதும் பற்றாக்குறை வீழ்வதற்கு முக்கிய காரணமாகிறது என்றார் அவர். அரசு தனது செலவுகளையும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவையும் ஒத்தி வைத்ததும் பற்றாக்குறை வீழ்ச்சியடையக் காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments