பாறுக் ஷிஹான்
வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் இன்று(5) ஈடுபடுகின்றனர்.
இதன் போது உரிய ஆவணங்கள் இன்றி வீதியில் பயணித்த இரு ஹன்ரர் ரக வாகனங்களும் 5 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.
0 Comments