கல்பிட்டி சுற்றுலாத்துறை சங்கத்தின் செயலாளர் மலிக் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வாடி வீட்டு முற்ற வெளியில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல்,வீட்டு செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்குதல்,இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் ஏனைய வைத்திய ஆலோசனைகளை வழங்குதல்,போன்ற பல சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான மிருக வைத்திய முகாம் தற்போது நடை பெருகிறது.
இவ்வைத்திய முகாம் 15 நாட்களுக்கு கல்பிட்டியிலுள்ள பல பகுதிகளில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
நாளை தேத்தா வாடி பகுதியிலும்,அடுத்த நாள் தில்லையடி பகுதியிலும் ,அதற்கடுத்த நாள் ஆனவாசல் பகுதியிலும் நடைபெரும்.செல்லப்பிராணிகளை வளர்ப்போர் இவ் இலவச சேவையை பயண்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொளளப்படுகிறீர்கள்.
-rizvi hussain-
0 Comments