Subscribe Us

header ads

நாட்டில் உள்ள திரு­டர்­கள் அனை­வரும் எங்கள் மீது திருட்டு குற்­றத்தை சுமத்­து­கின்­றனர். - ரவி கரு­ணா­நா­யக்க

ரவி கரு­ணா­நா­யக்க நேற்றுத் தனது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்த பின்னர் பத்­த­ர­முல்லை  ரஜ­மல்­வத்தை வீதியில் இருக்கும் தனது வீட்­டிற்கு  சென்றார்.
அப்­போது அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் அங்கு கூடி­நின்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கி­ய­மைக்கு தமது கவ­லை­க­ளை வெளி­யிட்­டனர். அத­னை­ய­டுத்து அவர்கள் முன்­னி­லையில் அமைச்சர் உரை­யாற்­று­கையில்,
நீங்கள் பார்க்கும் எமது வீடு புன­ர­மைக்­கப்­ப­டு­கி­றது. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் எனக்கு உத்­தி­யோ­க­பூர்வ இல்லம் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவே தேவை­யற்ற பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. நான் யார் என்­பது உங்­க­ளுக்கு தெரியும். நான் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தினேன். நாட்டில் உள்ள திரு­டர்­கள் அனை­வரும் எங்கள் மீது திருட்டு குற்­றத்தை சுமத்­து­கின்­றனர். நாங்கள் தூய்­மை­யா­ன­வர்கள். நாம் முன்­னோக்கி செல்ல வேண்டும். நாட்டை தூய்­மைப்­ப­டுத்த வேண்டும். நாம் அனை­வரும் இணைந்து நாட்டை உரு­வாக்­குவோம். நான் பெரு­மை­யுடன் இந்த முடிவை எடுத்தேன். என்னால் முடிந்­தது என்றால் ஏன் மற்­ற­வர்­க­ளுக்கு முடி­யாது. நாங்கள் அர­சாங்­கத்தில் இருந்­தாலும் எதிர்க்­கட்­சியில் இருப்­பது போல் உள்­ளது. நாம் அனை­வரும் இணைந்து உண்­மை­யான அர­சாங்­கத்தை அமைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஐக் கிய தேசியக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments