ரவி கருணாநாயக்க நேற்றுத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் பத்தரமுல்லை ரஜமல்வத்தை வீதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் அங்கு கூடிநின்று அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியமைக்கு தமது கவலைகளை வெளியிட்டனர். அதனையடுத்து அவர்கள் முன்னிலையில் அமைச்சர் உரையாற்றுகையில்,
நீங்கள் பார்க்கும் எமது வீடு புனரமைக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் எனக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் யார் என்பது உங்களுக்கு தெரியும். நான் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தினேன். நாட்டில் உள்ள திருடர்கள் அனைவரும் எங்கள் மீது திருட்டு குற்றத்தை சுமத்துகின்றனர். நாங்கள் தூய்மையானவர்கள். நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து நாட்டை உருவாக்குவோம். நான் பெருமையுடன் இந்த முடிவை எடுத்தேன். என்னால் முடிந்தது என்றால் ஏன் மற்றவர்களுக்கு முடியாது. நாங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருப்பது போல் உள்ளது. நாம் அனைவரும் இணைந்து உண்மையான அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஐக் கிய தேசியக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.
0 Comments