சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருமை நிறம் தரும் மருதாணி (Black Henna) மற்றும் அதுபோன்ற அங்கீகாரமற்ற அலங்காரப் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் அழகு நிலையங்கள் இவற்றை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் 2000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் அழகு நிலையத்தை தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்படும் என துபை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மேலும் இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வீடுகளுக்குச் சென்று சேவை வழங்கவும் மகளிர் அழகு நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments