ஷார்ஜாவில் 132 போக்குவரத்து குற்றங்களுக்காக 1.1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் செலுத்தாத ஜெகஜ்ஜால டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஷார்ஜாவில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு டிரைவர் என அடையாளம் கூறப்பட்டுள்ள ஒருவர் இதுவரை 132 போக்குவரத்து குற்றங்களுக்காக சுமார் 1.1 மில்லியன் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் இதுவரை ஒரு திர்ஹத்தை கூட அபராதமாக செலுத்தியதே இல்லையாம்.
அந்த டிரைவர் சட்டத்திற்கு புறம்பாக ஷார்ஜாவில் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காகவே பலமுறை பிடிபட்டுள்ளார். டிராக்குகளில் மாறி மாறி வாகனத்தை ஓட்டுதல், பிற எமிரேட்டுகளில் ஈடுபட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என ஷார்ஜா போலீஸ் தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments