Subscribe Us

header ads

ACMC கல்பிட்டி பிரதேச உயர்மட்ட குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் கிராம மட்ட தலைவர்களுடனான கலந்துரையாடல்


அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் ACMC கல்பிட்டி பிரதேச உயர்மட்ட குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் கிராம மட்ட தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு.

2017.07.30ம் திகதி கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு கட்சியின் பிரதித்தலைவரும் (ACMC Deputy Leader) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் M.H.M.நவவி அவர்கள் பிரதம அதிதியாக களந்துகொண்டதுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் சக உத்தியோகத்தர்களுடன் கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் ACMC கிராம மட்ட தலைவர்களுடன் சில ACMC ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதேவெலை கல்பிட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜனாப் M.முனாப் ஆசிரியர் ACMC கட்சியில் பகிரங்கமாக இணைந்துகொண்டதுடன் அவரின் குடும்ப அங்கத்தவர்களும் கட்சியில் இணைந்துகொண்டதாக மதிப்பிட்குரிய ஜனாப் M.முனாப் ஆசிரியர் தெரிவித்தார்.

அத்தோடு கட்சியில் அங்கத்துவம் பெறுவதற்காக அங்கத்துவப்படிவங்கள் பலரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்சின் நோக்கம், அதன் விரிவாக்கத்தின் தேவைப்பாடு ,ACMC தேசிய தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களினால் எதிர் பார்க்கப்படும் சிறுபான்மை மக்களின் சமூக மறுமலர்ச்சி உருவாக்கத்தின் தேவைப்பாடு, சமூக முன்னேற்றம் போன்ற விடயங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்பிட்டி பிரதேசத்தில் மகக்களுக்காக செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களும் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கின்ற சேவைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டது.

இந்த சிரிய நிகழ்விற்கு கல்பிட்டி பிரதேசத்தில் பெரும்திரலான இளைஞர்கள் கலந்துகொண்டதுடன் எதிர்காலத்தில் அமைச்சர் றிஷாட்பதியுதீன் அவர்களினதும் பிரதித்தலைவர் அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் வழிகாட்டலில் கல்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் தலைமையில் இளைஞர்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கவும் தயாராக உள்ளனர்.

இதேவேலை கல்பிட்டி பிரதேசத்தின் தேவைப்பாடுகள் குறைபாடுகள் தொடர்பான கலந்துறையாடலுடன் இனி வரும் காலங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித்திட்ங்கள் கல்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M முஸம்மில் அவர்களினுடாக இடம் பெறும் என்றும் கட்சியின் பிரதித்தலைவர் அல் ஹாஜ் M.H.M.நவவி தெரிவித்தார்.













Post a Comment

0 Comments