பூமியை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்க கிரக பாதுகாப்பு அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து 9 வயது சிறுவன் அந்த பணிக்கு விண்ணப்பித்திருந்ததால், நாசா அச்சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
நாசா சில தினங்களுக்கு முன்னர் பூமியை ஏலியன்களிடமிருந்து பாதுகாக்க கிரக பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உள்ளதாகவும், இதற்கு ஊதியம் 1,87,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதை அறிந்த 4-ஆம் வகுப்பு பயிலும் 9-வயது சிறுவன் இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தான். நியூ ஜெர்சியை சேர்ந்த ஜேக் அந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தான்.
அந்த கடிதத்தில், என்னை என் சகோதரி ஏலியன் என்று அழைப்பார். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது 9-ஆக இருக்கலாம்.
ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நினைப்பதாக கடிதத்தில் கூறியிருந்தார்.
சிறுவன் எழுதிய கடிதத்திற்கு நாசாவில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், ஜேக் உன் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இப்பதவி மிகவும் முக்கியமானது.
அதுமட்டுமின்றி சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை மீண்டும் கொண்டு வரும் போது, பூமியை காப்பது அவசியம். அதாவது சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது அவசியம்.
நாம் எப்படி சூரிய கிரகணத்தை கவனமாக ஆராய்ந்து பார்த்து கொண்டிருக்கிறோமோ, அது போலத் தான் பிற கிரகங்கள் மற்றும் நிலங்கள் பாதுகாப்பது குறித்து ஆராய்வது தான் இந்த வேலையின் முக்கியத்துவம்.
இதனால் நாங்கள் நல்ல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பணியில் அமர்த்த உள்ளோம். தற்போது நீங்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கிறீர்கள், படிப்பை சிறப்பாக முடியுங்கள். வருங்காலத்தில் நீங்களும் நாசாவில் பணி புரியலாம், அதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி பதில் கடிதம் அனுப்பபட்டுள்ளது.
0 Comments