2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பதுளை பசறையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் ஆயுள் முடிந்து விட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணியை அமைச்சர் ரவி கருணாநாயக்க அடித்துள்ளார்.
இனி புதைப்பது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நாங்கள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம்.
அதற்கு ஜனாதிபதியின் ஆசி தேவையில்லை. எப்படியாவது 113 உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
அவ்வாறு நிரூபித்து நாங்கள் பிரதமரை தெரிவு செய்வோம். அதற்கு எவரது ஆசிர்வாதமும் தேவையில்லை.
நாங்கள் பலத்தை காட்டிய பின்னர் அதனை ஏற்க முடியாது என்று கூற காலதேவனுக்கும் முடியாது.
மகிந்த என்னை பதுளைக்கு அனுப்பினார். நான் பதுளையை விட்டு செல்ல மாட்டேன். பதுளையுடன் எனக்கு பெரிய தொடர்புள்ளது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
0 Comments