ஓவ்வொரு ஆண்டும் சவுதி மன்னரின் சார்பாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகையினருக்கு ஹஜ் கடமைகளை சவுதி அரசின் முழுச்செலவில் நிறைவேற்றுவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு சுமார் 400 நிர்க்கதியான பாலாஸ்தீனிய குடும்பங்கள ஹஜ் செய்திட வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்த ஆண்டும் சவுதி மன்னர் சல்மான் அவர்களின் சார்பாக ஹஜ் செய்திட 1000 எகிப்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களின் தாய் நாட்டிற்காக உயிர்துறந்த ராணுவம் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினர் ஆவர். முஸ்லீம்கள் என்ற ரீதியில் இந்த வாய்ப்பு வரவேற்கத் தகுந்ததே என்றாலும் சொல்லப்பட்டுள்ள காரணம் சற்று நெருடலாகவுள்ளது.
அதேவேளை எகிப்திய ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் பெரும்பாலோர் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப்போக்கும், மேற்கத்திய கலாச்சார மோகமும் கொண்ட ஆளும் எகிப்திய ராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் முஸ்லீம்களை கொன்று குவிக்கக்கூடியவர்கள் என்ற கருத்தும் பலமாக நிலவுகிறது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments