Subscribe Us

header ads

சமகால அரசியல் நகர்வுகளில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது பங்களிப்பு இந்த நாட்டின் அனைத்தின மக்களுக்கும் அளப்பெரியது.


சமுதாயத்தின் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற தியாகி என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நேரம் காலம் பாராது தன்னை அர்ப்பணம் செய்கின்றார். இதனால் தான் இறைவன் அவரை கண்ணிப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். 

"அல்ஹம்துலில்லாஹ்"

அந்தவகையில் கல்பிட்டி, புத்தளம் அபிவிருத்தி சம்மந்தமாக அதிகளவில் கவனம் செலுத்தி இதுவரை காலமும் இழந்த கல்வி,கலை,கலாச்சார மற்றும் பொருளாதார, சமூகவியல் அத்தோடு அரசியல் மாற்றத்திற்கான திட்டங்களை வரைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற் கொண்டு வருவதை நாம் நிதர்சனமாகக் காணக்கூடியதாக உள்ளது.

அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மேற் கொண்ட முக்கியமான நடைமுறைதான் அதிகாரப் பரவலாக்கம் செய்தமை.

இந்த அதிகாரப் பரவலாக்கம் தான் இந்நாட்டில் குறுகிய காலத்திற்குல் அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்ட கட்சியாக மாறி வருகிறது.

குறிப்பாக கல்பிட்டி பிரதேசத்தின் ACMC அமைப்பாளர் ஜனாப் A.R.M. முசம்மில் sir அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி ஊடாக அமைச்சர் அதேபோல் ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களை அடிக்கடி சந்தித்து கல்பிட்டி தொடர்பாக பல் வேறு பிரச்சினைகளை முன்வைத்து செயற்திட்ட மாதிரியொன்றை அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

அந்தவகையில் உற்கட்டமைப்பு வசதிகள், பாடசாலை தேவைப்பாடுகள்,சுகாதார துறையின் பின்னடைவும் அதனது அபிவிருத்தி பற்றியும் பாலர் பாடசாலைகளின் தேவைகள்,பாதை, வடிகாண் அமைப்பு, வீட்டுத்திட்டம், வறுமையில் உள்ளோருக்கு சுயதொழில் வாய்ப்பு, படித்த இளைஞர் யவதிகளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு ....

கலாச்சார ரீதியாக உள்ள தேவைகள், தனிமனித உருவாக்கத்திற்கான சிறந்த திட்டமிட்ட வழிகாட்டல் பயிற்சிகள், உப்புவாய்க்கால் உற்பத்தியாளர்களுக்கான சிறந்ந திட்டமிட்ட உற்பத்தி செயன்முறைக்கான செயற்திட்டம், மீன்பிடி துறையை முன்னேற்ற வட்டியில்லா கடன் வசதிகள் மானியம் வழங்கள், விவசாயிகளுக்கு மானியம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு வசதிகள் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள், குடும்ப வருமானத்தை அதிகரிக்கச் செய்ய குடும்பத்திற்கு சுயதொழில் உபகரணங்கள் மானியமாக வாழுங்கள் .

ஆகிய உள்ளடங்களாக இன்னும் பல விடயங்களை குறிப்பிட்டு அமைச்சருக்கு வழங்கியுள்ளார் இதனது பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இதில் பல அபிவிருத்திகள் கட்டம் கட்டமாக நடந்து வருகின்றது. அமைச்சரின் ஐந்து ஆண்டு திட்டத்திற்கமைவாக அனைத்தும் "இன்ஷா அல்லாஹ் " நடைபெறும்.

ஒரு கட்சின் தலைவர் என்பதனால் அனைத்து பிரதேசத்துக்கும் அபிவிருத்திக்கு செய்ய வேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு.

கல்பிட்டி அமைப்பாளர் A.R.M.முசம்மில் sir அவர்களின் மேற்காட்டப்பட்ட அனைத்தையும் பார்க்கின்ற பொழுது எதிர் காலத்தில் நவீன சவால்களை முறியடிக்காக் கூடிய மற்றும் வறுமையற்ற பிரதேசமாக மாற்றம் காணும் சமூகத்தை பார்க்க நினைக்கிறார். அப்போது நாங்கள் இருப்போம் என்று சொல்ல முடியாது சமுதாய வளர்ச்சி ஏற்பட்டு மறுமலர்ச்சி உண்டாகி சுபீட்சம் நிறைந்த அதிகளவில் கல்வியியலாளர்களைக் கொண்ட சமூகத்தை காணலாம். ("உங்கள் சிந்தனை நிதர்சனம்")

 விடியலை நோக்கி - Facebook

Post a Comment

0 Comments