சவுதி அரேபியாவில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சவுதியில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டது மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையுடன் அதுவும் நிறைவடைந்தது.
நீட்டிக்கப்பட்ட 4 மாத பொதுமன்னிப்புக் காலம் இனியும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் கடும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீண்டும் சவுதிக்குள் வர தடை செய்யப்படுவார்கள் என்றும் சவுதி ஜவாஜத் துறையின் பொது மேலாண்மை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்துள்ளார்.
இந்த 4 மாத பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 6 லட்சம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேறியுள்ளதாகவும், சுமார் 15,000 பேர் மீண்டும் முறையான ஆவணங்களுடன் திரும்பி வந்துள்ளதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் வெளியேறாமல் இருப்பதாகவும் அவர்களும் பிடிக்கப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
0 Comments