Subscribe Us

header ads

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஏர் செஷல்ஸ் விமானங்கள் மோதல் நூலிழையில் தவிர்ப்பு !



மொரிஷியஸ் தீவில் நிகழவிருந்த 2 விமானங்களின் மோதல் ஏர் செஷல்ஸ் விமானிகளின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்டுள்ள செய்தியை செஷல்ஸ் அரசுசெய்தி நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டி இன்று வெளியிட்டுள்ளது ஏவியேஸன் ஹெரால்டு பத்திரிக்கை.

கடந்த வெள்ளிக்கிழமை (14.07.2017) அன்று மொரிஷியஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பி 37,000 அடி உயரத்தில் பறக்க ஏர் செஷல்ஸ் விமானத்திற்கு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதியளித்தது. அதேவேளை 38,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த உலகின் பெரிய விமானங்களின் ஒன்றான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் டபுள் டெக்கர் விமானம் தரையிறங்க 36,000 அடிக்கு கீழிறங்கி கொண்டிருந்தது.

இரு விமானங்களும் இந்திய பெருங்கடல் பரப்பிற்கு மேல் வான்வெளியில் மோதிக் கொள்ளவிருந்த நிலையில் ஏர் செஷல்ஸ் விமானிகள் விமானத்தை மாற்று வழியில் திருப்பி நூலிழையில் பெரும் விபத்தை தவிர்த்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! உணரும் பயணிகள் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திப்போம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments