பிலால், அலி , ஹஸன் ஆகிய மூன்று சகோதரர்களும் இணைந்து துவிச்சக்கர வண்டியொன்றினை மோட்டார் சைக்கிளாக மாற்றியுள்ளனர்.
ஏ.எச்.எம். ஷபீல், எம்.சீ. எப். ஸஹ்றா ஆகியோரின் புதல்வர்களான முகம்மது பிலால் ( தரம் 11 - தொழில் நுட்ப பிரிவு ), முஹம்மது அலி ( தரம் 10 ), முகம்மது ஹஸன் ( தரம் 6 ) ஆகிய மூன்று சகோதரர்களும் இணைந்து இந்த புதிய வகையிலான மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். நாம் தயாரித்த ஒரு வாகனத்தில் நாம் பயணிப்பது என்பது ஒரு தனி சந்தோஷம் என்று இவர்கள் கருத்துக் கூறினர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக புத்தெழிலுக்கு கருத்து தெரிவித்த இவர்கள்
இந்த புதிய வகையிலான மோட்டார் சைக்கிளை தயாரிக்க சுமார் 1 1 / 2 மாதங்கள் எமக்கு தேவைப்பட்டது. துவிச்சக்கரவண்டியில் 6.2 சக்தி கொண்ட தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை பொறுத்தி மோட்டார் சைக்கிளை இயக்க வைக்கின்றோம். அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கு தேவையான உதிரிப்பாகங்களை பொறுத்தினோம். 5 லீட்டர் பெற்றல் இந்த இயந்திரத்தில் சேமித்து வைக்க முடியும். 65 மீட்டர் வேகத்தில் எமது இந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளோம்.
எதிர்காலத்தில் என்ன திட்டம் என்று கேட்ட போது
மேலும் தரமான உதிரிப்பாகங்களை பொறுத்தி தரமான முறையில் மோட்டார் சைக்களை தயாரிக்க எண்ணியுள்ளோம். உத்தியோகபூர்வ அரச அனுமதி கிடைத்தால் தரமான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வோம். அதன் முதற் கட்டமாக புதிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளோம். BAH 212 என்பது தான் நாம் இந்த மோட்டார் சைக்கிளுக்கு சூட்டியுள்ள பெயர்.
யாருடைய உதவியும் இன்றி இந்த BAH சகோதரர்களின் புதிய கண்டுபிடிப்பு உலகில் பெயர் பெற வேண்டும் என்பது புத்தெழிலின் பிரார்த்தனையாகும்.
( அப்துல் நமாஸ் )
Puthelil
0 Comments