இந்நாட்களில் தீ வைப்புகள் தொடர்வதால், முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை பாதுகாத்துக்கொள்ள, (வாளி, மணல், நீர்விநியோகம் உட்பட) தீயணைக்கும் கருவிகளை வாங்கி வைத்திருப்பது மிக அவசியமாகும்.
மேலும், CCTV கெமரா இருப்பதால் பெரிய பயனேதும் இல்லை. அசம்பாவிதம் நடந்த பின்னர் அது எப்படி நடந்தது? என ஊடகங்களில் வெளியிட்டு லைக் வாங்க மட்டுமே முடியும்.
இரவில் கடைக்கு வெளியே மின்குமிழ்களை ஒளிரச்செய்வதுடன், (பாதுகாப்பு உறுதியெனில்) தமது கடைகளினுள் ஓரிருவர் இரவில் தங்கலாம். அசம்பாவிதங்கள் நிகழுமிடத்து உடனே தீயை அணைத்து விடுவதுடன் சிலவேளைகளில் குற்றவாளியை மடக்கிப் பிடிக்கவும் முடியும்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொதுவான ஓரிரு இடங்களில் இக்கருவிகளை தயார்நிலையில் வைத்திருக்கலாம்.
பொதுவாக, முஸ்லிம்கள் குறைவாக வாழும் பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்களே இனவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றன என்பதால் அவ்வாறானவர்கள் அதிக அக்கறை எடுத்தல் நலம்.
ரமழான் காலங்களில் ஆடைக்கடைகளில் அதிகமான இருப்பை (Stock) வைத்திருப்பர் என்பதால், அபாயமும் மிக அதிகம். அவ்வாறானவர்கள் தமது மேலதிக சாமான்களை ஒரேயிடத்தில் அல்லாது வேறொரு இடத்தில் களஞ்சியப்படுத்தலாம்.
முக்கியமாக...
வட்டியுடனான தொடர்பை உடனே நிறுத்துவோம்.
ஏழைகளுக்கு சேர வேண்டிய ஸக்காத்தை மனமுவந்து கொடுத்து விடுவோம்.
எமது சொத்துக்கள் பாதுகாக்கப்படும்
இன் ஷா அள்ளாஹ்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:276)
____________
நானும் ஒரு வியாபாரி என்பதால் ஏதோ என்னாலான ஒரு சிறு ஆலோசனை இது. உங்களுக்கும் ஏதும் ஆலோசனைகள் தோன்றினால் பகிர்ந்து கொள்ளலாம்.
0 Comments