கொழும்பு 10. மாளிகாவத்தை லக்ஹிருசெவன வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகை தந்த சமயம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் ஜனாதிபதி மைத்திரிஅவர்களை குனிந்து நின்று இருகரம் கூப்பி வணங்கும் காட்சியை காணலாம்.
இப்படிப்பட்ட முதுகெலும்பு வளைத்து அவர் கைகூப்பி ஜனாதிபதிக்கு வணங்கும்
பௌவியத்தை அமைச்சர் சம்பிக்க மற்றும் வருகை தந்த ஏனையவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுவபர்கள் கூடசெய்யாத ஒருவிடயத்தை சகோதரர் முஜிபுர் றஹ்மான் செய்வதை ஆர்வத்துடனும் ஆனந்தத்துடனும் பார்த்துரசிக்கின்றனர்.
முஸ்லிம்களுக்காக நாங்கள் இனவாதிகளுடன் போர் செய்ய இவர்களுடன் கேட்கவில்லை, இஸ்லாமியவழிமுறைகளை அந்நிய சமூகத்தின் மத்தியில் செய்துகாட்டி எங்களுடைய தனித்துவ அடையாளத்தை பேனுவதன்ஊடாக எங்களுக்கான கௌரவத்தை நாங்கள் பெறமுடியும் என்பதைத் தான் கூறுகிறோம்.
அண்மையில் அமைச்சர் கபீர் காசிம் அவர்களும் இவ்வாறு நடந்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.
அ.அஹமட்
0 Comments