உலக அளவில்
இஸ்லாமியர்களை அளிக்க திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின்
கதவுகள் அகல திறந்துகொடுக்கப்பட்டுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர்
இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக
பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
கடந்த
ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள்
இருந்த விடயம் தொடர்பில் இன்று அரசியல் மேடைகளில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றன.
இதன் வெளிப்பாடே தற்போது இலங்கை நாட்டை நோக்கிய சர்வதேச சக்திகளின் மோதல்கள் ஒரு
போதுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. கடந்த காலங்களை போலல்லாது இவற்றுள் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகம் முக்கிய கவனம் செலுத்த கடப்பாடு
உள்ளது.
தற்போதைய
அரசானது இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணுகிறது.
இவ்விரண்டு நாடுகளின் மிக நெருங்கிய சகாவாக அமேரிக்கா உள்ளது. இந்த கூட்டை எடுத்து
நோக்கினால் இந் நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களோடு உலக அளவில் செயற்படுபனவையாகும்.
இந்தியா ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை இந்து மஹா சபை பொது பல சேனாவுக்கான ஆதரவை பகிரங்கப்படுத்தி
செயற்படும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பொது பல சேனா இணைந்து செயற்படும் என
ஏற்கனவே பொது பல சேனா அறிவித்துள்ளது.
ஆர்.ஆர்.எஸ் என்றால் அது மோடியின் தாய் வீடு.இந்தியாவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்வன்முறைகளை ஆர் எஸ் எஸ் அரச அனுசரனையுடன்
நடத்திவருகிறது என்ற நேரடி குற்றச்சாட்டுஉள்ளது.இந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் விடயங்களை நோக்கும் போது இவ்விருநாடுகளிலும் இனவாதத்தை ஒரு தாய் சக்தியே பின்புலத்தில் இருந்து இவற்றை எல்லாம் இயக்கலாம் என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த
விடயங்கள் ஒரு புறம் இருக்க அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாகிஸ்தான் நாட்டுக்குவிஜயம் மேற்கொண்டிருந்தார்.அங்கு அவரை சந்தித்த பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு முன்னாள் தலைவர்மஹிந்தவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.மஹிந்தவுக்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெற்ற விடயம்தொடர்பிலும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் புலானாய்வு பிரிவு பிரதாணி கூட மஹிந்தவுக்குஎதிரான சூழ்ச்சிகள் குறித்து பேசும் அளவும் விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பலஸ்தீனத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கின்ற போதும் முன்னாள் ஜனாதிபதிபலஸ்தீனத்துக்கு தனது பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தி
வந்தவர் அதற்கு பகரமாக அங்கு அவரின் பெயரில் ஒருவீதி கூட உள்ளது.
நிகழ்காலத்தில் நடப்பவைகளை பார்க்கும் போது மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் நாடுகளை துணையாக கொண்டும்தற்போதைய அரசானது முஸ்லிம்களின் எதிரி நாடுகளை துணையாக கொண்டும் அரசியல் செய்தமுயற்சிப்பதையும் அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்களின் பரம விரோதியாக இஸ்ரேல் போன்ற நாடுகளுடனும் மோடி போன்ற இனவாத தலைவர்களுடனும்கூட்டு வைத்துள்ள இவ்வரசிடமிருந்து ஒரு போதும் முஸ்லிம்கள் விடிவை பெற முடியாது என்ற விடயத்தை இலங்கைமுஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நல்லாட்சிக்கு எதிராக பலமான அரசியல் சக்தியுடன் முஸ்லீம்கள் அணி திரளவேண்டும் என அவரது ஊடகபிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments