Subscribe Us

header ads

கத்தார் அரசு விடுக்கும் முக்கிய அறிவித்தல்....! கத்தாரில் உணவு பற்றாக்குறை வதந்திகளை நம்பவேண்டாம்


தற்போது வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது இந்த நிலையில் கத்தாரில் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக சமூக  வலைத்தளம் பொய்யான வதந்திகளை பரப்பி  வருதாக கத்தார் அமைச்சு கூறியுள்ளது.

மேலும் இந்த வதந்திகளை நம்பவேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும்  ஒரு வலைதளம் மக்கள் உணவுப்பொருட்களை சேகரிக்க துவங்கியுள்ளதாக பொய்யான செய்தி யை பரப்பி வருதாகும் அமைச்சகம் கூறியுள்ளது.

இருப்பினும் கத்தாருக்கு உணவுப்பொருட்கள் வளைகுடா நாடுகளில் மட்டுமின்றி உலகமுழு வதிலுமிருந்து வருகிறது என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் உணவுப்பொருட்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதாகவும் கத்தார் அரசு கூறியுள்ளது.

மேலும் வெளிவிவகார அமைச்சு கூறுகையில்  கத்தார் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகள் குடிமக்களை பாதிக்காது என்றும் அதற்கான போதிய நடவடிக்கைகளை தாம் முன் எடுத்துள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Mohamed Hasil

Post a Comment

0 Comments